பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இறுதிச்சுற்று. இப்படம் இந்தியில் சாலா காதூஸ் என்ற பெயரில் வௌியாக உள்ளது. மாதவன் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரம் இப்படத்தில் அவருக்கு, அதாவது பாக்ஸராக நடித்திருக்கிறார். இதற்காக விஷேச பயிற்சி எல்லாம் எடுத்து நடித்துள்ளார். இப்படம் பற்றி மாதவன் நமக்கு அளித்த பேட்டி...
உங்களது தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் ஹிட்டானது, ஆகையால் இப்படம் எந்தமாதிரி ரிசல்ட்டை தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதா.?
உண்மை தான், இதுவரை நான் நடித்திராத ஒரு படம் இந்த சலா காதூஸ். பாக்ஸர் போன்ற ஒரு கேரக்டரில் என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா.? என்கிற பயம் எனக்கு உள்ளது. மேலும் இப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் நடிகை கிடையாது, நிஜமாலுமே பாக்ஸர், ஆகையால் ஒருவித அழுத்தம் எனக்குள் இருக்கிறது. இந்தப்படம் ரசிகர்களை தியேட்டருக்குள் வர வைக்குமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
எதற்காக இப்படி ஒரு படத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.?
இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இது வழக்கமான ஒரு படத்தின் கதை கிடையாது. முற்றிலும் வித்தியாசமான கதை. படத்தின் கதை மீதும், என் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என் மனசுக்கு நெருக்கமான ஒரு கதை பிடித்து போய்விட்டால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். பாலிவுட் சினிமா என்னை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளுமா, கொள்ளாதா.? என்று தெரியவில்லை, ஆனால் ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்று கொள்வார்கள். என்னுடைய ரஹானா ஹே தேரே தில் மே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவில்லை, ஆனால் ரசிகர்கள் அந்தப்படத்தை விரும்பினார்கள். சாலா காதூஸ் படத்தின் கதை மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால் இப்படத்தில் நடித்தேன்.
இந்தப்படத்திற்காக உங்களை எப்படி தயார்படுத்தினீர்கள்.?
தினமும் உடற்பயிற்சி செய்தேன், அதோடு பாக்ஸிங்கும் கற்று கொண்டேன். சுமார் 8 முதல் 9 மாதங்கள் வரை முறைப்படி பாக்ஸிங் பயிற்சி எடுத்தேன். அதன்பின்னர் பாக்ஸர் ரோலில் நடிக்க தயாரானேன். இன்றைக்கு ஒவ்வொரு சராசரி ஆணும், சிக்ஸ் பேக், டான்ஸ் எல்லாம் கற்று வருகிறார்கள். ஆனால் நான் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னை பார்ப்பவர்கள் இவர் தான் மாதவனா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு ஏற்றவாறு கஷ்டப்பட்டு இந்த பாக்ஸர் ரோலில் நடித்தேன்.
இந்தப்படத்தின் ஹீரோயின் நிஜமாலுமே பாக்ஸர், அவருடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?
ஆமாம், ரித்விகா சிங் நிஜமாகவே பாக்ஸர் தான். சினிமாவுக்கு அவர் புதியவர் தான், ஆனால் அவரை யாரும் புதுமுகம் என்று சொல்ல முடியாது, அந்தளவுக்கு பிரமாதமாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த ரோலுக்கு அவர் எப்படி செட் ஆவார் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட சூப்பராக நடித்தார்.
இப்படத்தை வேறு சில படங்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே இதைப்பற்றி உங்கள் கருத்து.?
ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். இப்படத்தை சக்தே இந்தியா, மேரி கோம் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், இப்படம் அந்த படங்களுக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. ஒரு ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையேயான உறவு, ஒரு கோச்சருக்கும், வீராங்கனைக்கும் இடையேயான உறவை சொல்கிற படம் தான் இந்த சாலா காதூஸ். இந்தப்படம் முற்றிலும் வித்தியாசமானது.
பொதுவாக ஹீரோக்கள் வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் நடிப்பார்கள், ஆனால் நீங்கள் ஒரு படம் தான் நடிக்கிறீர்கள் ஏன்.?
இந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒரு படம் தான் நடித்திருக்கிறேன். ஏனென்றால் எனக்கு எந்த படத்திலும் நடிக்க பிடிக்கவில்லை. இன்றைக்கு இருக்கும் ரசிகர்கள் ரொம்ப ஸ்மார்ட் ஆனவர்கள், இரண்டாவது முறை எல்லாம் வாய்ப்பு தரமாட்டார்கள். மேலும், நான் ஒன்றும் சல்மானோ, ஷாரூக்கானோ கிடையாது. அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ள மாட்டார்கள், ஆனால் எனக்கு அப்படி கிடையாது. எனவே ஒரு படம் நடித்தாலும் சிறப்பான படத்தை தர வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு நான் நடித்துள்ள 10 படங்களில், 8 படம் ஹிட்டாகி இருக்கிறது.
உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க.?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போது என் கையில் சுத்தமாக ஒரு படம் கூட கிடையாது. நானும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. இந்தப்படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் நான் எந்தப்படத்தில் நடிக்க போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.
இவ்வாறு மாதவன் கூறினார்.