'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் சகிப்புத்தன்மை குறித்து இவர் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அமீர்கானுக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான் , இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியதாவது...
''இந்தியாவில் பிறந்தேன், இந்தியாவில் தான் என் இறப்பும் இருக்கும். ஒருபோதும் நான் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்றோ, இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றோ கூறவில்லை. என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா பலதரப்பட்ட மொழிகளையும், கலாச்சாரத்தையும் கொண்ட நாடு. இந்தியாவில் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை விஷயம் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. நான் வெளிநாடுகளுக்கு சென்றால் கூட இரண்டு வாரத்திற்கு மேல் என்னால் அந்த நாட்டில் இருக்க முடியாது. எப்போது என் தாய்நாட்டிற்கு போவேன் என்று மனம் ஏங்கி கொண்டு இருக்கும்.
இவ்வாறு அமீர் கான் கூறியுள்ளார்