இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அகில் : தி பவர் ஆப் ஜுவா படத்தின் தோல்விக்கு பின்னர் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை அகில் இன்னும் தேர்வு செய்யவில்லை. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் மகன் அகில், யேக் ஜவானி ஹை திவானி எனும் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குனர் சுகுமாரிடம் அகில் வாய்ப்பு கேட்டுள்ளதாக தெரிகிறது. ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற நானாகு பிரேமதோ படத்தை இயக்கிய சுகுமார் தற்போது ஓய்வெடுக்க சுற்றுலா சென்றுள்ளார். மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை சுகுமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அகில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் அப்ஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் சுகுமாரை அணுகியுள்ளனர். ஆனால் சுகுமாரோ தனது சுற்றுலாவை முடித்த பின்னர் முடிவை கூறுவதாகக் கூறியுள்ளாராம்.