'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் கணிதன். இந்த படத்தை சந்தோஷ் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் எஸ்.தாணு, அதர்வா, கேத்ரின் தெரசா, டிரம்ஸ் சிவமணி, மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், இந்த படத்தை இயக்கியுள்ள சந்தோஷ் என்னிடத்தில் ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். என்னிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்களில் சந்தோஷ் திறமையானவர். நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் எஸ்.தாணு என் உதவியாளருக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முன்பு புதுமுக இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்து வந்தவர் மறைந்த நடிகர் முரளி. அவருக்குப்பிறகு அஜீத், விஜய் இருவருமே நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருபவர் கணிதன் பட நாயகனான அதர்வாதான். இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் .
அதோடு, மோசமான கதையை கேட்டபதை விட கொடுமை எதுவும் இல்லை. ஆனால் 50 மோசமான கதைகளைக் கேட்டால் தான் அதிலிருந்து ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுக்க முடியும். அதனால் எல்லா கதைகளையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அப்போதுதான் ஹிட் கொடுக்க முடியும். மேலும், ஒரு ஹீரோ நடிக்கிற 5 படங்களில் 2 படம் பெரிய இயக்குனர்களுக்கு கொடுத்தால் 3 படங்களை புது இயக்குனர்களுக்கும் கொடுங்கள். குறிப்பாக, என் சிஷ்யர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
மேலும், இந்த படத்துக்கு இசையமைத்துள்ள டிரம்மர் சிவமணி ஒருமுறை விமானத்தில் சென்றபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது இந்த விமானம் கடத்தப்பட்டால் என்னவாகும் என நான் யோசித்தபடியே சென்றேன். கதைக்காக இந்த மாதிரி நான் யோசிப்பதுண்டு. அப்போது என் அருகில் அமர்ந்திருந்த சிவமணி காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்து கொடுத்து வைத்த மனிதர் இவர் என்று நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் என் பக்கம் திரும்பிய அவர், அந்த ஹெட்போனை என்னிடம் கொடுத்து ஒரு ரிதம் போட்டுள்ளேன் கேளுங்கள் என்றார். ஆக, அவரும் தூங்காமல் அவரது வேலையைத்தான் செய்து கொண்டு வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் இந்த படத்துக்கு அவர் சிறப்பான இசையைத்தான் கொடுத்திருப்பார் என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசுகையில், கணிதன் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படத்தை இயக்கி வந்தபோது, அந்த படத்தில் ஒர்க் பண்ணி வந்த சந்தோஷ், அப்போதே இந்த கணிதன் கதையை என்னிடம் சொன்னார். கதை பிடித்திருந்ததோடு, அதர்வாவுக்கு பொருத்தமாக இருந்ததால் அவரை நாயகனாக வைத்து இந்த படத்தை தயாரித்தேன்.
மேலும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் நினைத்தால் ஒரே நேரத்தில் நிறைய படங்களுக்கு இசையமைக்கலாம். ஆனால் அவர் புதியவர்களும் வளர வேண்டும் என்ற நோக்கம் காரணமாக குறைவான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார் என்றார்.