இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கமல்ஹாசனின் மூத்த மகளும், இந்தியத் திரையுலகத்தில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் அவருடைய 31வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். நேற்று மாலையிருந்தே அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வரும் ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“உங்கள் அனைவரின் அன்பிலும், வாழ்த்துகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதிகப்படியான வாழ்த்துகளால் திணறிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி டிவிட்டர் நண்பர்களே,” என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் தற்போது 'எஸ் 3', தமிழ்ப் படத்திலும், 'பிரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், இரண்டு ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் ராம் சரண் ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசனுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என அந்த மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் முன்னணிக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். மேலும் சில புதிய படங்களில் நடிப்பதற்காகவும் பேசி வருகிறார்.