சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாவது புதிய விஷயமில்லை. சொல்லப்போனால்... ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர் நாற்காலியில் அமர்வது என்பது காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். இப்படி கடந்காலத்தில் எத்தனையோ பிரபல ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி உள்ளனர். பாலுமகேந்திரா, நிவாஸ், அசோக்குமார், என்.கே.விசுவநாதன், பி.சி.ஸ்ரீராம், ஜீவா, கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரன் என மிகப்பெரிய பட்டியலே போட முடியும்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்தவர்கள் வரிசையில் தற்போது செழியனும் இடம்பெறவிருக்கிறார். 'கல்லூரி' படத்தின் மூலம் பாலாஜி சக்திவேல் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் செழியன். அப்படத்தைத் தொடர்ந்து தாமிரா இயக்கிய ரெட்டைச்சுழி, சீமான் இயக்கிய மகிழ்ச்சி, சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பாலா இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை ஆகிய படங்களுக்கும் செழியன்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தாரை தப்பட்டை படத்தை அடுத்து மிஷ்கின், ஆர்.கே.சுரேஷை இணைந்து நடிக்க வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ் இருவருமே போலீஸாக நடிக்கவிருக்கிறார்களாம். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மார்ச் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் பிரபல பத்திரிகையில் உலக சினிமா பற்றி எழுதியவர்தான் இந்த செழியன். எனவே செழியன் இயக்கும் படத்தில் அவருடைய உலக சினிமா அறிவைக் கொட்டுவார் என்று நம்பலாம்.?