பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பெங்கால் டைகர் படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எவடு ஒக்கடு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நாகார்ஜுனாவை அப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ரவி தேஜாவும் தனது அடுத்த படத்தில் இறங்கி விட்டார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பதாகக் கூறி பின்னர் கைவிடப்பட்ட ஆட்டோ ஜானி படத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளதாக பூரி ஜெகன்நாத் ஏற்கனவே கூறினார்.
தற்போது இப்படத்தின் திரைக்கதையில் தனகேற்றவாறு சில மாற்றங்களைச் செய்யுமாறு ரவி தேஜா பூரி ஜெகன்நாத்திடம் கூறியுள்ளாராம். ரோச் படத்தில் பிசியாகியுள்ள பூரி ஜெகன்நாத் ஆட்டோ ஜானி படத்தை கையில் எடுத்துள்ளாராம். ஏற்கனவே ஐந்து முறை பூரி ஜெகன்நாத்தின் படங்களில் நடித்துள்ள ரவி தேஜா ஆறாவது முறையாக நடிக்க தயாராகி விட்டார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.