பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இந்தியாவில் தயாராகும் பல படங்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கடந்த வெள்ளியன்று வெளியான கயா கூல் ஹெய்ன் ஹம் 3 படம் பாகிஸ்தானின் தணிக்கைக் குழுவால் ஆபாசமான திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டு அந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தணிக்கைக்குழு அதிகாரியான மொபாஷிர் ஹாசன் கூறுகையில், “இந்த திரைப்படம் மிகவும் மோசமான ஆபாச காட்சிகளையும், நிர்வாண காட்சிகளையும் கொண்டுள்ளது. இது பொது மக்கள் பார்க்க முற்றிலும் தகாத படமாகும். ஆபாச வசனங்கள் மற்றும் ஆபாச காட்சிகள் கொட்டிக் கிடப்பதால் கயா குல் ஹெய்ன் ஹம் 3 திரைப்படத்தை பாகிஸ்தானில் தடை செய்கின்றோம்” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியானதைப் போலவே பாகிஸ்தானிலும் ஒரு சில திரையரங்கில் இத்திரைப்படம் வெளியானது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை படம் ஓடிய பின்னர் பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்பால் தணிக்கைக் குழு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துஷார் கபூர், அப்தப் ஷிவ்தாஷினி மற்றும் மந்தனா கரிமி நடிப்பில் வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் பாலிவுட்டில் கணிசமான வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.