தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவை ஒரு அதிரடி ஸ்டைலிஷ் நாயகனாக மாற்றியதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு முக்கிய பங்கு உண்டு. சூர்யாவின் உயரத்துடன் ஒப்பிட்டால் அவரால் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கூட நடிக்க முடியாது. ஆனால், சூர்யாவை 'காக்க காக்க' படத்தில் காமிரா கோணங்களின் உதவியுடன் உதவி போலீஸ் கமிஷனராகக் காட்டி அவரையும் போலீசாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைத்தார் கௌதம். அந்தப் படத்திற்குப் பின்தான் சூர்யாவுக்கு அதிகமான பெண் ரசிகைகள் கிடைத்தார்கள். அந்தத் தெம்பில்தான் 'சிங்கம் 3' வரை போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
அடுத்து சூர்யா - கௌதம் மேனன் இணைந்த 'வாரணம் ஆயிரம்' படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கடுத்து இருவரும் இணைந்து 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தை கோலாகலமாகத் தொடங்கினார்கள். ஆனால், கதைப் பிரச்சனையில் சூர்யாவே ஒரு அறிக்கை வெளியிட்டு அந்தப் படத்திலிருந்து விலகுகிறேன் என சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீண்டும் இருவரும் இணைவார்களா என்பது இந்த நிமிடம் வரைக்கும் உறுதியில்லை.
இதனிடையே 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜெயம் ரவியை வைத்து ஆரம்பிக்க கௌதம் மேனன் தயாராகி வருகிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள்.