மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவுக்கு, கலை துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த விருது குறித்து ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெறுவதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எனது குடும்பம் ராணுவ பின்னணியில் உடையது தான். இந்த விருது எனக்கு ஸ்பெஷலானது. இந்த விருது என்னை மட்டுமல்ல என் தந்தையையும் பெருமை அடைய செய்யும். என்னைப்போன்று இந்தாண்டில் பத்மவிருது பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
பல தலைமுறைகள் கடந்து இந்திய சினிமா நூற்றாண்டை கண்டுள்ளது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சராசரி பெண்ணாக நானும் என்னை வளர்த்து கொண்டேன். இந்த விருதை என்னுடன் பயணித்த சகநடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருடன் இந்த விருதை நான் பகிர்ந்து கொள்கிறேன். இந்த விருது என்னை மேலும் உற்சாகமாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.