ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா ஐதராபாத்தில், திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவு செய்தி கேள்விப்பட்டு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது...
"சின்னவீடு"என்ற படத்தின் மூலம் நமக்கு அறிமுகமாகி, தனது நடிப்புத் திறமையால் இன்று வரை நம் எல்லோர் மனதிலும் தாய்மை உணர்வோடு நிறைந்துவிட்ட அவரை, காலத்திடம் கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம். மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் தெலுகு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். அயராது கலைப்பணியாற்றியவர். பழகுவதற்கு இனிமையானவர்.
நகைச்சுவை குனசித்திரம் என்ற இரண்டிலும் தனது நடிப்புத் திறமைக்காக "தேசிய விருது"பெற்றவர். நாங்கள் பொறுப்பேற்று கொண்ட நாளிலிருந்து தன்னை நடிகர் சங்க உறுப்பினராக்கி கொள்ள ஆசைப்பட்டு விரைவில் "வாழ்நாள் உறுப்பினர் கார்டு" எடுக்கவிருந்தார். அதன் ஈரம் காய்வதற்குள் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது! அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்!