மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்த் திரைப்படங்களின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில பெரிய நட்சத்திரப் படங்களின் பட்ஜெட் 75 கோடி வரை செல்வதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர், ரஜினிகாந்த் மீண்டும் இணைந்துள்ள '2.0' படத்தின் பட்ஜெட் 350 கோடி என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பே செய்திகள் வெளிவந்தன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் படங்களையும் அடுத்த நிலையில் உள்ள சில நட்சத்திரங்களின் படங்களையும் மும்பையை மையமாகக் கொண்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிடுகின்றன. இடையில் கொஞ்ச காலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் இல்லாமல் இருந்தது. தற்போது அது மீண்டும் அதிகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார், பிவிபி சினிமா, ஈராஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது அதிக அளவில் தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனவாம். ஆனால், யு டிவி நிறுவனம் தமிழில் படங்களைத் தயாரிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது '2.0, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்' ஆகிய படங்களைத் த யாரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் 'விசாரணை' உள்ளிட்ட சில படங்களை வினியோகமும் செய்ய உள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 'ரங்கூன், தெறி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' ஆகிய படங்களை வெளியிட உள்ளது.
பிவிபி சினிமா நிறுவனம் 'பெங்ளூர் நாட்கள், தோழா, பிரம்மோற்சவம்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.
ஈராஸ் நிறுவனம் அடுத்து தமிழில் '24, எங்கிட்ட மோதாதே, உயிரே உயிரே, எஸ் 3, கை நீளம், ஒரு கிடாயின் கருணை மாமு மற்றும் கார்த்தி - லிங்குசாமி இணையும் படம்' என சில படங்களைத் தயாரித்தும் வெளியிடவும் உள்ளது.
இந்த ஆண்டு பல பெரிய படங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.