டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பல்வேறு துறையில் சாதித்த பிரபலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மபூஷண் விருது
இதில் பாலிவுட்டின் மூத்த நடிகர் அனுபம் கெர், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி பாடகரான உதித் நாராயணன் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீவிருது
இதேப்போன்று நடிகர் அஜய்தேவ்கன், நடிகை ப்ரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக சேவை செய்வேன் - அஜய்
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி நடிகர் அஜய்தேவ்கனுக்கு மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது... இந்த விருதை நான் பெறுவதை மிகவும் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். இன்றைக்கு என் வாழ்நாளில் சிறப்பான ஒரு நாள். தற்போது நான் ஷி்வ்வாய் படத்திற்காக வெளிநாட்டில் இருக்கிறேன். இந்த விருது எனக்கான பொறுப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நம் நாட்டுக்காக கண்டிப்பாக நான் சேவை செய்வேன் என்று உறுதிப்பட கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.