இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு பெருமை அளிப்பதாகவும், தன் நலம் விரும்பிகளுக்கு அனைவருக்கும் நன்றி என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான ஸ்டாராகவும் விளங்கி வருபவர் ரஜினிகாந்த். மக்கள் நடிகராகவே இருந்து வரும் ரஜினிகாந்த் இதுவரை மிகப் பெரிய விருதுகள் எதையும் வாங்கியதில்லை. அதிகமான திரைப்பட விருதுகளையும் அவர் வாங்கியதில்லை. பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களை வாங்குபவர்களும், அதை ரசிப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கமர்ஷியலான படங்களில் மட்டுமே நடித்து வருபவர். எந்த விதமான விபரீத, பரீட்சார்த்த முயற்சிகளை தன் படங்களில் அவர் அதிகம் எடுத்ததில்லை.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு. அதன்படி இந்தாண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
இதில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இந்த விருதை அவருக்கு வழங்கி கவுரவிக்க இருக்கிறது.
ஏற்கனவே கடந்த 2000-ம் ஆண்டு ரஜினிக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பெருமைப்படுகிறேன் - ரஜினி : இந்த பத்மவிபூஷண் விருது எனக்கு பெருமையளிக்கிறது. என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.