ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா என முன்னணி நடிகைகள் பேய் கதைகளுக்கு மாறிவிட்டனர். ஹன்சிகா பேயாக மிரட்டிய அரண்மனை படத்தைத் தொடர்ந்து அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். நடிகை த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ள அரண்மனை 2 ஜனவரி 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. த்ரிஷா நடிக்கும் மற்றொரு திகில் திரைப்படம் நாயகி தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகின்றது. நயன்தாரா நடிப்பில் தமிழில் மாயா என்ற பெயரிலும் தெலுங்கில் மையூரி என்ற வெளிவந்த திகில் திரைப்படம் வசூலை அள்ளியது.
தொடர் திகில் படங்களில் வெற்றி நடிகைகள் மத்தியில் திகில் படங்களில் நடிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த வரிசையில் நடிகை ரெஜினாவும் இணைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திகில் படத்தில் நடிகை ரெஜினா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 7G ரெயின்போ காலினி, யாரடி நீ மோகனி போன்ற படங்களை தெலுங்கிலும் இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் செல்வராகவன் தான் அடுத்து இயக்கவிருக்கும் திகில் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.