தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரதேசிக்கு பிறகும் தள்ளாடிய அதர்வாவை ஈட்டி படம் ஸ்டெடி பண்ணி விட்டது. அதனால் இப்போது அவர் நடித்து வரும் 'ருக்குமணி வண்டி வருது' படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதோடு, தனுஷ், விஷால் வரிசையில் தானும் சொந்த பட நிறுவனம் தொடங்கியிருக்கும் அதர்வா, வித்தியாசமான கதை தேடலிலும தீவிரமடைந்திருக்கிறார். அந்த நிறுவனம் மூலம் தனது முதல் படமான பாணா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி இயக்கும் படத்தில் தற்போது நடிக்கிறார் அதர்வா.
இதையடுத்து, மலையாள தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறாராம் அதர்வா. அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறதாம். அந்தவகையில், முதன்முதலாக அதர்வா நடிப்பில் மூன்று மொழிகளில் ஒரு படம் தயாராக உள்ளது. மேலும், சூர்யாவை ரோல் மாடலாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதர்வா, புதுமுக இயக்குனர் இயக்கும் அந்த படத்தில் சூர்யா பாணியில் தனது மேனரிஸத்தை வெளிப்படுத்தி அதிரடி ஆக்சனிலும் இறங்குகிறாராம்.