இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமானவர் சேது. இவர் ஒரு டாக்டர். அதோடு சந்தானத்தின் இளமைக்கால சினேகிதர். அதனால் தான் தனக்குள் இருக்கிற சினிமா ஆசையை சேது சொன்னபோது, உடனே அவரை அந்த படத்தில் நாயகனாக்கினார் சந்தானம். மேலும் தான் ஹீரோவாக நடிப்பதற்கு அப்படத்தில் அஸ்திவாரம் போட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி, அதையடுத்து சேது நாயகனாக நடித்த 'வாலிபராஜா' படத்திலும் தான் ஒரு நாட்டு மருத்துவ டாக்டராக நடித்தார் சந்தானம். இந்த படத்திலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங்கே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி வியாபாரமாகவில்லை. அதனால் அடுத்தடுத்து நடிப்பதில் விருப்பம் இல்லாத சேது, தனது டாக்டர் தொழிலில் கவனத்தை திருப்பினார். அதோடு ஏற்கனவே இருந்ததை விடவும் உடல் பெருத்து விட்டாராம்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் சந்தானத்தை சந்திக்க சென்றபோது, அவர் வெயிட் போட்டிருந்ததைப்பார்த்த சந்தானம், ஒரு ஹீரோ இப்படியிருக்கக்கூடாது. எப்போதுமே தன்னை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி, அவருக்கு வெயிட்டை குறைக்குமாறு கேட்டுக்கொண்டாராம். அதோடு, மீண்டும் சேது நாயகனாக நடிப்பதற்கும் தனக்கு தெரிந்த நட்பு வட்டார டைரக்டர்களிடம் சிபாரிசு செய்கிறாராம் சந்தானம்.