திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள நடிகை கல்பனா இன்று(ஜன.25ம் தேதி) காலை திடீரென மரணமடைந்தார். ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கில் இருந்த கல்பனாவுக்கு அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். கல்பனா, இருதய நோயால் இறந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983-ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். அதன்பிறகு காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
எண்ணற்ற மலையாளப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள நடிகை கல்பனா, நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.
50 வயதான கல்பனா, தமிழில் பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜ் மனைவியாக நடித்தார். அந்தப் படத்திற்காக குண்டான கதாநாயகி தேவைப்பட்டது. படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை குண்டாக மாற்றிக் கொண்டு நடித்தவர். அந்தப் படம் அவருக்கு பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அடுத்து பாலுமகேந்திரா இயக்கி கமல்ஹாசன் நாயகனாக நடித்த சதி லீலாவதி படத்தில் ரமேஷ் அரவிந்த் மனைவியாக நடித்தார். கமல்ஹாசன் நடித்த பம்மல் கே. சம்பந்தம், அழகம் பெருமாள் இயக்கிய டும் டும் டும் படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருந்தார்.
கல்பானா, மலையாளம் இயக்குநர் அனில் குமாரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பால் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். கல்பனாவிற்கு ஸ்ரீமாயி என்ற ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார்.
மலையாளத்தில் வெளிவந்த தனிச்சல என்ஜன் என்ற படத்திற்காக, 2012ம் ஆண்டின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
கல்பனாவின் உடல் விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கல்பனாவின் மரணம் பற்றி தெரியவந்ததும் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் திருவனந்தபுரம் செல்கிறார்கள்.
முன்னதாக கல்பனாவின் மரண செய்தி கேள்விப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்திக், கோவை சரளா, சதீஷ் உள்ளிட்ட பலர் ஐதரபாத்தில் கல்பனா இருந்த மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.