ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்துக்கு பிறகு அருள்நிதி நடிக்கும் படம் ஆறாது சினம். உதயநிதியை வைத்து டிமாண்டி காலணியை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். இது அருள்நிதி போலீசாக நடிக்கும் 2வது படம். இதில் அவர் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இருவரும் 5 வயது குழந்தைக்கு அப்பா, அம்மாவாக நடிக்கிறார்கள்.
கொலை குற்றவாளிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு கொலைகாரர்கள் எந்த அளவிற்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள். அதையும் மீறி போலீஸ் அதிகாரிகள் எப்படி கடமையாற்றுகிறார்கள். அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது மாதிரியான கதை. 39 லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள அதிகாரம் தலைப்பில் இருக்கும் குறள்களை கொண்டு புதுமையான பாடல் ஒன்றுக்கு தமன் இசை அமைத்துள்ளார்.
மதுரை, செங்கல்பட்டு, சென்னை, பாண்டிச்சேரி பகுதியில் படப்பிடிப்புகள் நடந்துள்ளது. படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் கதையை எழுதியிருப்பவர் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.