ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த அனிருத் 'பீப் பாடல்' சர்ச்சைக்குப் பிறகு மிகவும் நொந்து போய் விட்டார் அனிருத் என்றே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அனிருத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்த தனுஷ் கூட 'கொடி' படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ததும் அதனால்தான் என்கிறார்கள்.
'பீப் பாடல்' சர்ச்சை எழுந்த சமயத்தில் கனடாவில் இருந்த அனிருத், அங்கிருந்து இந்தியா திரும்புவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். கடைசியாக பொங்கலுக்கு முன்பாக கோயம்புத்தூர் சென்று காவல் துறையிடம் அவருடைய விளக்கத்தைத் தெரிவித்தார். இருந்தாலும் புதிய படங்களுக்கு மன அமைதியுடன் இசையமைக்க முடியாததால்தான் அனிருத் அவராகவே சில படங்களை வேண்டாமென்று சொன்னதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் பிரபல இயக்குனரான திரிவிக்ரம் இயக்க நிதின், சமந்தா நடித்து வரும் 'அ ஆ' படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், 'பீப் பாடல்' சர்ச்சையால் அந்தப் படத்திற்கு இதுவரை எந்த ஒரு பாடலையும் அனிருத் பதிவு செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இயக்குனர் அனிருத்தை நீக்கினாரா அல்லது, அனிருத்தே அந்தப் படத்தை வேண்டமென்று சொன்னாரா என்பது கேள்வியாக உள்ளது.
ஏற்கெனவே ராம் சரண் நடித்த 'ப்ரூஸ் லீ' படத்திற்கும் அனிருத் இசையமைக்க சம்மதித்து 'வேதாளம்' படம் கிடைத்ததும அந்தப் படத்தை வேண்டாம் என மறுத்துவிட்டார். தற்போது இரண்டாவது முறையாக தெலுங்கில் இசையமைக்க வந்த வாய்ப்பை உதறிவிட்டார். இனியும், அவரை தெலுங்கு இயக்குனர்கள் தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்வார்களா என்பது சந்தேகம்தான் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.