தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் நாட்டில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் ரஜினி. எல்லா சென்டர்களிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூரிலும் அவருக்கு ரசிகர்கள் இருப்பதினால் தான் தற்போது கபாலி படப்பிடிப்பு அங்கு நடந்தபோது ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டனர். அந்த அளவுக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுள்ளார் ரஜினி. அதோடு, அவருடன் கபாலியில் நடித்து வரும் சக நடிகர் நடிகைகள் அவர் நடிப்பதை வெகுவாக ரசித்தபடியே அவருடன் நடித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், படப்பிடிப்பு தளத்தில் சின்னச்சின்ன கேப் கிடைக்கும்போது, தான் அதிகமாக ரசித்த நடிகர்களின் நடிப்பு மற்றும் காட்சிகளைப்பற்றி இளவட்ட நடிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறாராம் ரஜினி. அந்த வகையில், அவர் ரசிகராக மாறி எம்ஜிஆர், சிவாஜியின் நடிப்பில் தான் ரசித்தது குறித்து சொல்வதை கேட்க அனைவரும் கூடி விடுகிறார்களாம். சில சமயங்களில் டைரக்டர் ரஞ்சித்தும், ரஜினி ரசித்த விசயங்களை சொல்லும்போது அதை ஆர்வமுடன் கேட்கிறாராம்.