ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடித்த சந்திரமுகி ஹிட்டுக்குப்பிறகு பி.வாசு இயக்கிய பரமசிவன், தொட்டால் பூ மலரும், குசேலன், புலி வேசம் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியாக அமையவில்லை. அதனால் தனது ஆரம்ப காலத்திலேயே கன்னடத்தில் ராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இயக்கிய வந்த பி.வாசு, மறுபடியும் கன்னட சினிமாவில் என்ட்ரி ஆனார். சில நேரடி படங்களை இயக்கியவர் திரிஷ்யம் ரீமேக் படத்தை கன்னட ரவிச்சந்திரன்-நவ்யா நாயரை வைத்து இயக்கி வெற்றி பெற்றார். அதனால் இப்போது கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரை வைத்து சிவலிங்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனது மகனான நடிகர் ஷக்தியையும் செகண்ட் ஹீரோவாக நடித்து வைத்துள்ளார் பி.வாசு.
தமிழில், ஷக்தி நடித்த தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், தற்காப்பு ஆகிய படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட்டடிக்காததால் ஒரு சேஞ்சுக்காக மகன் ஷக்தியை இந்த படத்தில் நடிக்க வைக்கிறாராம் பி.வாசு. முதலில் ஒரு சிறிய கேரக்டரில் அவரை நடிக்க வைக்கயிருந்தவர். பின்னர் அவரது கேரக்டரை இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு பெருசுபடுத்தி விட்டாராம். மேலும். இதே படத்தை அடுத்து தமிழில் ஒரு முன்னணி ஹீரோவை வைத்து ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ள பி.வாசு, அந்த படத்திலும் ஷக்தியை நடிக்க வைக்கிறாராம்.