அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கியவர் அருண்குமார். மீண்டும் அவரை வைத்து இப்போது 'சேதுபதி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்துக்கு இணையான இன்னொரு போலீஸ் படம் என்கிறார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். அதன்காரணமாகவே அவருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் மறுத்து விட்டார்களாம்.
இதுபற்றி டைரக்டர் அருண்குமார் கூறுகையில், இந்த படத்துக்கு சேதுபதி என்று தலைப்பு வைத்த பிறகு கதாநாயகியாக நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் பேசினேன். ஆனால் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் இரண்டு குழந்தைக்கு அம்மா என்றதும் தெறித்து ஓடினர். இந்த படத்தில் விஜய்சேதுபதியும் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாகத்தான் நடிக்கிறார் என்று சொல்லியும் யாரும் உடன்படவில்லை.
அதன்பிறகுதான் பீட்சாவில் விஜயசேதுபதியுடன் நடித்த ரம்யா நம்பீசனை கேட்டேன். அவர் உடனே ஓகே சொன்னார். அந்த வகையில், இந்த படத்தில் விஜய்சேதுபதி- ரம்யா நம்பீசன் இருவரும் இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோராக நடித்திருப்பதை பார்க்கையில், பீட்சா படத்தில் முதலாளியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப்பாகி சென்ற அந்த கப்புல்ஸ், இரண்டு பிள்ளைகளுடன் திரும்பி வந்தது போன்று இந்த படத்தில் அவர்கள் ஜோடி சேர்ந்திருப்பது தெரிகிறது. மேலும், கணவன்-மனைவியாக இரண்டு பேருமே வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு அந்நியோன்யம் அவர்களிடம் தெரிந்தது என்கிறார் இயக்குனர் அருண்குமார்.