அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிக்க வந்து, மார்க்கெட் பிக்கப்பாகி சரியாக இரண்டு, மூன்று வருடங்கள் மட்டுமே கதாநாயகியாக நடித்துவிட்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் அமலாபால். இருந்தாலும் நல்ல கதைகளும் கேரக்டர்களும் வந்தால் நடிக்கலாம் என்கிற சினிமா மரபை மீறாமல் கணவர் அனுமதியுடன் நடித்து வருகிறார். அப்படி தேடிவந்த படம் தான் 'பசங்க-2'. சூர்யாவுக்கு ஜோடி, குழந்தைகளுக்கான படம் என அந்த படம் பிடித்துப்போக அதில் வெண்பா டீச்சராக தனது வேடத்தை சிறப்பாக செய்து பாராட்டு பெற்றார் அமலா பால்..
இதேபோல மலையாளத்திலும் இரண்டு குழந்தைகளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ஒன்றில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் அமலாபால். படத்தின் பெயர் '2 பெண்குட்டிகள்', இதில் சமூக ஆர்வலராக நடித்துள்ளார் அமலாபால். இந்தப்படம் ஏற்கனவே தயாராகி, ஒடிசா சர்வதேச திரைப்படவிழா மற்றும் பூஷன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது. இரண்டு குழந்தைகள் கதாபாத்திரங்களில் அன்னா பாத்திமா, சாம்பவி என இரண்டு சிறுமிகள் நடித்துள்ளனர். இந்தப்படம் இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ளது.