தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி, மராட்டி மொழிகளைச் சேர்ந்த திரைப்படக்கலைஞர்கள் இந்தப் போட்டியில் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். தமிழ்த்திரைப்பட உலகைச் சேர்ந்த நடிகர்களின் அணிக்கு சென்னை ரைனோஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த அணியின் ஆணிவேராக இருந்தவர் நடிகர் அப்பாஸ். அவர்தான் சக நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த அணியை உருவாக்கினார். ட்ரிபிள் வி என்று அழைக்கப்பட்ட விஷால், விக்ராந்த், விஷ்ணு ஆகியோர் பாலிடிக்ஸ் செய்து அப்பாஸை வெளியே அனுப்பினார்கள். அணியின் கேப்டனாக விஷால் உள்ளே வந்தார். அதன் பிறகு, விஷாலுக்கும் சென்னை ரைனோஸ் அணியின் பங்குதாரர்களில் ஒருவரான சரத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இன்னொரு பக்கம், விஷால் உள்ளே வந்த பிறகு தனக்கு நெருக்கமான விக்ராந்த், விஷ்ணு ஆகியோருக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
சென்னை ரைனோஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக விக்ராந்த், விஷ்ணு உருவெடுத்ததோடு அவர்கள் இல்லாமல் இல்லை சென்னை அணி என்ற நிலை உருவானது.
'ட்ரிபிள் வி'யின் கொட்டம் அதிகமானதால் அணியில் பிளவு ஏற்பட்டது. நடிகர் ஜீவாவோ அணியில் இருந்து கொண்டே சாமர்த்தியமாக காயை நகர்த்தி விஷாலை கேப்டன் பதவியில் இருந்தே விலக வைத்தார். அது மட்டுமல்ல கடந்த வருடம் சென்னை அணிக்கு தானே கேப்டனானார். விரைவில் சிசிஎல் சீசன் 6 தொடங்க உள்ளது.
இந்நிலையில் நாங்கள் இரண்டு பேரும் இல்லை என்றால் சென்னை ரைனோஸ் அணி ஜெயிக்கவே முடியாது என்ற மிதப்பில் உள்ள விக்ராந்த், விஷ்ணு இருவரும் சென்னை ரைனோஸ் அணியில் விளையாட மாட்டோம் என்று முரண்டு பிடித்து வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சென்னை ரைனோஸ் அணியின் நிர்வாகம்.
ஜீவாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, எங்களில் ஒருவரை கேப்டனாக்க வேண்டும். மற்ற நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட எங்கள் இரண்டு பேருக்கும் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று இரண்டு நிபந்தனையை விதித்துள்ளனர்.
விக்ராந்த், விஷ்ணுவின் பாலிடிக்ஸைக் கண்டு ஜீவா எரிச்சல் அடைந்திருந்தார். போட்டிக்கு சில நாட்களே உள்ளநிலையில், பிளாக்மெயில் செய்வதுபோல் விக்ராந்த், விஷ்ணு இருவரும் நடந்து கொண்டது பிடிக்காமல் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் பதவியை ஜீவா ராஜினாமா செய்துவிட்டார். ஜீவா பதவி விலகியதை அடுத்து, ஆர்யாவை கேப்டனாக்க முயற்சி செய்து வருகின்றனர்.