பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான் கான். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், சினிமா தொழிலில் வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... நிறைய பேர் சினிமாவுக்கு வருகிறார்கள், அதில் எல்லோரும் கைநிறைய படங்களுடன் சிறப்பாக வாழ்வது கிடையாது. இங்கு பைட் மாஸ்டர் மகன் தான் அஜய்தேவ்கன், என் அப்பா ஒரு கதாசிரியர் இப்படி சினிமா பின்புலம் உள்ளவர்கள் இருக்கிறார்கள், ஷாரூக்கான், அக்ஷ்ய் போன்ற சினிமா பின்புலம் இல்லாதவர்களும் இந்த பீல்ட்டில் ஜொலிக்கிறார்கள். நடிகர்கள் எப்படியாக இருப்பின் அவர்களை தீர்மானிப்பது ரசிகர்கள் தான். இந்தப்படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என்று அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். ஆகையால் ரசிகர்களின் ரசனைக்கேற்ப சினிமாவின் தரத்தை உயர்த்தி கொண்டே இருக்க வேண்டும், அப்படி செய்தால் தான் சினிமா தொழிலில் சிறப்பாக வாழ முடியும், இல்லையென்றால் அது சிரமம் என்று கூறியுள்ளார்.