'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனிமொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்.