அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
அதர்வா நாயகனாக அறிமுகமான முதல் படத்தை இயக்கியவர் பத்ரி. அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இந்நிலையில், தற்போது தனது சொந்த பேனரிலேயே ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பத்ரிக்கு கொடுத்துள்ளார் அதர்வா. சில மாதங்களாக இந்த படத்தின் கதை விவாதம் நடந்து வந்த நிலையில், நேற்றைய தினம் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த படத்திற்கு டைட்டீல் மற்றும் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அதர்வா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதல்கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்தார் பத்ரி. ஆனால், நேற்றைய தினம் அவர்கள் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, அதர்வாவின் ரசிகர் மன்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் விபத்தில் இறந்து விட்டாராம். இவர் அதர்வாவிடம் பல வருடங்களாக பணியாற்றி வந்தவராம். அதனால் முதல்நாளே நடக்கயிருந்த படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார் அதர்வா. மாற்று தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.