ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பார்த்திபன் இயக்கிய, ''கதை திரைக்கதை வசனம் இயக்கம்'' படத்திற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தவர் அகிலா கிஷோர். அந்த படத்தின் ஆடியோ விழாவின்போது அவரை பார்த்தவர்கள், அடுத்த நயன்தாரா என்றார்கள். அதோடு, சில பட்ஜெட் பட டைரக்டர்கள் நயன்தாராவுக்கு பதிலாக அகிலாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து அவரை அணுகினர். ஆனால், அவரோ, முதல் படமே ஹிட். அதனால் அடுத்து முன்னணி ஹீரோவுடதான் நடிப்பேன் என்று அடம் பிடித்தார்.
விளைவு, அவரை துரத்திய டைரக்டர்கள் தெறித்து ஓடி விட்டனர். இதனால் அடுத்து யாருமே தன்னை தொடர்பு கொள்ளாததால் அதிர்ச்சியடைந்தார் அகிலா கிஷோர். அதனால், காமெடியன் சந்தானத்துக்கு ஜோடியாக இனிமே இப்படித்தான் படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதோடு, புதுமுக நடிகர் சுனில்குமாருடன் மூன்றாம் உலகப்போர் படத்திலும் கமிட்டானார்.
இந்நிலையில், தற்போது மூன்றாம் உலகப்போர் படம் திரைக்கு வரும் நிலையில், புதிய படங்களுக்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கும் அகிலா கிஷோர், பில்லா நயன்தாராவாக உருவெடுக்க தான் தயாராக இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தியை உலவ விட்டிருக்கிறார். கமர்சியல் பட டைரக்டர்களின் காதுகளில் இந்த செய்தி கிசுகிசுக்கப்பட்டு வருகிறதாம்.