பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரள அரசின் சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நிசாகந்தி என்ற தலைப்பில் இசை, நாட்டிய விழா நடத்துகிறது. இந்த விழாவில் ஒரு சாதனை கலைஞருக்கு நிசாகந்தி விருது வழங்கப்படும், பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு நிசாகந்தி விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி இந்த விருதை இளையராஜாவுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது "இளையராஜாவுக்கு விருது வழங்குவது கேரளத்துக்கு பெருமை. கேரளம் புகழின் உச்சிக்கு சென்று விட்டது. இளையராஜா தொடங்க இருக்கும் சங்கீத அகாடமிக்கு 5 ஏக்கர் நிலம் தருவதாக 1990ம் ஆண்டே உறுதியளிக்கப்பட்டது. ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக இதுவரை வழங்கவில்லை. இப்போது அதனை நிறைவேற்ற இருக்கிறோம். இளையராஜா அகாடமி தொடங்க கேரள அரசின் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும்" என்றார்.
பின்னர் பேசிய இளையராஜா "நான் தொடங்கும் அகாடமி மூலம் கேரளாவில் பல இளையராஜாக்களை உருவாக்குவேன்" என்றார்.