அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மாஜி நடிகை ஜெயச்சித்ராவின் வாரிசு நடிகர் அம்ரேஷ். தனது மகன் அம்ரேஷை, 'நானே என்னுள் இல்லை' படத்தின் மூலம் ஹீரோவாக்கினார் ஜெயச்சித்ரா. இப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அதன்பின்னர் அம்ரேஷ் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது திடீரென இசையமைப்பாளராகி இருக்கிறார். அதுவும் தற்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கிறார்.
இதுப்பற்றி அம்ரேஷிடம் கேட்டபோது, அவர் நம்மிடம் கூறியதாவது... ''உண்மையை சொல்லப்போனால் எனக்கு நடிப்பதில் உடன்பாடு கிடையாது. நான் சின்ன வயதில் இருந்தே இசையில் தான் அதிகம் ஆர்வத்துடன் உள்ளேன். என்னுடைய ஆர்வம் எது என்று தெரியாமல் என் அம்மா என்னை ஹீரோவாக்கிவிட்டார். அவருடைய ஆசைக்காக ஒரு படத்தில் நடித்தேன். இனி நடிக்க மாட்டேன்.
8 வயதில் இருந்து நான் இசையை கற்று வருகிறேன். ஏ.ஆர்.ரஹ்மான், மணிசர்மா, தமன் போன்றவர்களிடம் எல்லாம் வேலை பார்த்துள்ளேன். தற்போது, ''மொட்ட சிவா கெட்ட சிவா, பொட்டு, தாத்த காரை தொடாதே, தெரியும் ஆனால் தெரியாது'' ஆகிய நான்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். இசை தான் எனது உயிர். ரகுமான் மாதிரி நானும் பெரிய இசையமைப்பாளராக வேண்டும், அது தான் எனது லட்சியம் என்றவர், ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றால் உடலை வருத்தி, டயட் எல்லாம் கடைபிடித்து பிட்டாக இருக்க வேண்டும், அது எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று கூறினார்.