ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியின் மூன்றாபவது படமான '2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் ஆரம்பமானது. புத்தாண்டு வரை நடைபெற்ற படப்பிடிப்புக்கு அதன் பிறகு இடைவேளை கொடுக்கப்பட்டது. ரஜினிகாந்த் 'கபாலி' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்புக்குச் சென்றதால்தான் அந்த இடைவேளை. அது முடிந்ததும் ரஜினிகாந்த் மீண்டும் '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
2.0 படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் பொலிவியா நாட்டில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றுதான் பொலிவியா. இந்த நாட்டிலும் புகழ் பெற்ற அமேசான் நதி பாய்கிறது. 'எந்திரன்' படத்தில் இடம் பெற்ற 'கிளிமாஞ்சரோ...' பாடலை பொலிவியா நாட்டின் பக்கத்து நாடான பெரு நாட்டில் உள்ள 'மச்சு பிச்சு' மலையில்தான் ஷங்கர் படமாக்கியிருந்தார். அப்போதே பக்கத்து நாடான பொலிவியாவின் அழகும் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்புக்காகவும் அங்கு செல்கிறார் போலிருக்கிறது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் என்ற பெருமையப் பெற்றுள்ள 2.0 படத்திற்காக இன்னும் பல புதிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.