நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
'கெத்து' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் 'மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம்தான் உதயநிதியின் அடுத்த படமாக வெளிவர உள்ளது. இதனிடையே உதயநிதி 'மனிதன்' படத்தை அடுத்து நடிக்கும் படத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்க உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். 'வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா' ஆகிய படங்களுக்குப் பிறகு சுசீந்திரன், விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இந்தப் படம் மூலம் இணைகிறார்கள். விஷ்ணு விஷால் நடித்த 'நீர்ப் பறவை' படத்தை உதயநிதி ஸ்டாலின்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'கெத்து' படத்திற்கு பல எதிர்மறை விமர்சனங்கள் வந்து, விமர்சகர்களை உதயநிதி கடுமையாகச் சாடியிருந்தார். அவருடன் மீண்டும் சந்தானம் இணைந்து நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். ஆனால், உதயநிதி தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.