டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நாக சைதன்யா நடித்து வருகின்றார். மேலும் மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாகசைதன்யா மட்டுமல்லாது அவருடன் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு அதிக தேதிகள் ஒதுக்க வேண்டி இருந்ததால் இப்படத்திலிருந்து கார்த்தியும் துல்கர் சல்மானும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு பதில் டோலிவுட்டின் இளம் நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் ராணாவிடம் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.