ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நாக சைதன்யா நடித்து வருகின்றார். மேலும் மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாக சைதன்யா நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாகசைதன்யா மட்டுமல்லாது அவருடன் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு அதிக தேதிகள் ஒதுக்க வேண்டி இருந்ததால் இப்படத்திலிருந்து கார்த்தியும் துல்கர் சல்மானும் விலகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு பதில் டோலிவுட்டின் இளம் நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் ராணாவிடம் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.