இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தடையற தாக்க, என்னமோ ஏதோ போன்ற தமிழ் படங்களில் நடித்தும் கண்டு கொள்ளப்படாத நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் அளவிற்கு உயர்ந்து விட்டார். ஆனாலும் அவர் சேர்ந்த முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவ ராகுல் ப்ரீத்தி சிங் சோகத்தில் ஆழ்ந்துவிட்டார்.
ரவி தேஜாவின் கிக் 2, ராம் சரணின் ப்ரூஸ் லீ போன்ற பெரிய பட்ஜெட் படங்களும் தோல்வியைத் தழுவியதால் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என பயந்திருந்த ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு நாணாகு பிரேமதோ படத்தின் வெற்றி புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கும் ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்த நாணாகு பிரேமதோ திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகின்றது. இப்படத்திற்கு சொந்த குரலிலேயே பின்னணியும் பேசி அசத்திய ராகுல் ப்ரீத்தி சிங்கின் முயற்சி வீண் போகவில்லை. நாணாகு பிரேமதோ படத்தின் வெற்றியால் படக்குழுவினரைக் காட்டிலும் நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுனுடன் இணைந்து சரைனொடு படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது நடித்து வருகின்றார்.