ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் சங்கத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. சங்கத்தின் தலைவர் ஷோபி மாஸ்டர் தலைமையில் நடந்த இந்த விழாவை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சங்கத்திற்கென்று தனியான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தொடங்கி வைத்தார்.
பின்னர் மூத்த பெண் நடன இயக்குனர்கள் பொங்கல் வைத்தனர். அதனை உண்டு மகிழ்ந்துவிட்டு மூத்த நடன இயக்குனர்கள் முதல் நடன இயக்குனர்களின் குழந்தைகள் வரை பங்கேற்ற 45 நிமிட தொடர் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் மூத்த நடன இயக்குனர்கள் போட்ட குத்தாட்டத்தால் அரங்கம் அதிர்ந்தது. அதிலும் அனுராதா போட்ட குத்தாட்டம் எல்லோரையும் உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்தது.
"நடன இயக்குனர்கள் தனித்தனி படங்களில் பணியாற்றுகிறோம். குடும்பத்தோடு இணையும் வாய்ப்புகள் குறைவு அதனால் இந்த பொங்கல் விழாவை குடும்ப விழாவாக நடத்தினோம். சங்கத்திற்கென்று தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சங்கத்தை பற்றிய தகவல்கள் வெளியிடப்படும். உறுப்பினர்கள் லாக் இன் செய்து சங்க சுற்றரிக்கை, சங்கத்தின் வரவு செலவுகள், உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்" என்றார் தலைவர் ஷோபி.