ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா நடிகர்கள் பொழுதுபோக்காக கிரிக்கெட் விளையாடியது இன்றைக்கு மிகப்பெரிய பிசினஸ் ஆக மாறிவிட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி, மராட்டி மொழிகளைச் சேர்ந்த திரைப்படக்கலைஞர்கள் பங்குபெறும் வகையில் சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரது முன்முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில் தமிழ்த்திரைப்பட உலகைச் சேர்ந்த நடிகர்களின் அணிக்கு சென்னை ரினஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த அணியின் ஆணிவேராக இருந்தவர் நடிகர் அப்பாஸ்.
பின்னர் இந்த அணியின் கேப்டனாக விஷால் உள்ளே வந்தார்.
விஷால் உள்ளே வந்த பிறகு தனக்கு நெருக்கமான விக்ராந்த், விஷ்ணு ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.
அதன் காரணமாக சென்னை ரினோஸ் அணியில் பாலிடிக்ஸ் தலையெடுத்தது.
அப்பாஸ் அணியைவிட்டேப் போய்விட, அவரது ஆதரவாளர்களான நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர்.
விக்ராந்த், விஷ்ணு இல்லாமல் சென்னை ரினோஸ் அணி இல்லை என்ற நிலை உருவானது.
அதனால் கடுப்பான ஜீவா, தன் பாணியில் ஒரு பாலிடிக்ஸ் செய்து விஷாலை கேப்டன் பதவியில் இருந்து அகற்றியதோடு தானே கேப்டனாகிவிட்டார்.
இந்நிலையில் விரைவில் சிசிஎல் தொடங்க உள்ளது.
விஷால் ஆதரவாளர்களான விக்ராந்த், விஷ்ணு இருவரும் சென்னை ரினோஸ் அணியில் ஆட மாட்டோம் என்று முரண்டு பிடித்து வருகின்றனர்.
ஜீவாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, விஷாலை மீண்டும் கேப்டனாக்க வேண்டுமாம்.