ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் பிரபலமானவர் நரேன். அதன்பிறகு பீட்சா, சுந்தரபாண்டியன், முகமூடி, தேசிங்கு ராஜா, சரபம், யாகவராயினும் நா காக்க, இனிமே இப்படித்தான், வாலு, புலி என பல படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார். இதனால் அப்பா வேடம் என்றாலே கூப்பிடு ஆடுகளம் நரேனை என்றாகி விட்டது. ஆனால், படத்துக்குப்படம் அப்பாவின் செண்டி மென்ட் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்ததால் இப்போது நரேன் ஒரே மாதிரியாகவே நடிப்பார் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
இதுபற்றி ஆடுகளம் நரேன் கூறுகையில், அப்பா வேடம் என்றாலே எல்லா வேடங்களிலுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் நடிக்க வேண்டியதிருக்கும். அந்த வேடங்களில் டைரக்டர்கள் எந்த மாதிரி எதிர்பார்க்கிறார்களோ அதைதான நானும் செய்ய முடியும். அதோடு முடிந்தவரை நானும் வித்தியாசம் காட்டிதான் நடிக்கிறேன். என்றாலும், படத்துக்குப்படம் அப்பாவாக நடித்ததால் தொடர்ந்து என்னை அப்படி பார்த்து ரசிகர்களுக்கு போரடித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
அதனால், இனிமேல் நெகடீவ் ரோல் மற்றும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான வேடங்களில், குறிப்பாக, ஆடுகளம் நரேன் என்றால் அப்பாவாகத்தானே வருவார் என்று யூகிக்க முடியாத கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில் கொடூரமான வில்லன் வேடம் கொடுத்தாலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் நரேன்.