இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிட்டத்தட்ட நான்காம் பாகம் என்று கூட சொல்லலாம், இயக்குனர் மேஜர் ரவியும் மோகன்லாலும் இணையவிருக்கும் புதிய படத்தை. ராணுவ பின்னணி சார்ந்த படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் இயக்கிய 'கீர்த்தி சக்ரா', 'குருசேத்ரா', 'காந்தகார்' என மூன்று படங்களிலுமே மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். ராணுவத்தில் பணியாற்றும் மேஜர் மகாதேவன் என்பவர் தன் வாழ்வில் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவமும் ஒரு படமாக மாறியது. இப்போது மீண்டும் மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார் மேஜர் ரவி.
இந்தமுறை 1971ல் பங்களாதேஷை முன்னிட்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரை பின்னணியாக கொண்டு கதையை உருவாக்கியுள்ளாராம் மேஜர் ரவி.. இந்தப்படத்தில் மிக புதுமையான விஷயம் ஒன்றை புகுத்த இருக்கிறாராம் மேஜர் ரவி. அதாவது இந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபடும் ராணுவ அதிகாரியாக மேஜர் மகாதேவனின் தந்தை கதாபாத்திரத்தை புகுத்தி, அதிலும் மோகன்லாலையே நடிக்க வைக்க் இருக்கிறாராம் மேஜர் ரவி..
தந்தையை பார்த்து பின்னாளில் மகாதேவன் ராணுவத்தில் சேர்ந்து மேஜர் மகாதேவன் ஆவதாக கதை பின்னப்பட்டுள்ளது. ஒருவகையில் பார்த்தால் இந்தப்படத்தை நான்காம் பாகம் என்பதை விட 'ப்ரீக்குவல்' அதாவது முன் பாகம் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்தப்படத்தில் மூன்று வேடங்களில் மோகன்லால் நடிக்க இருப்பதாகவும் மேஜர் ரவி கூறியுள்ளார். மூன்றாவது கேரக்டர் என்ன என்பது இப்போதுவரை சஸ்பென்ஸ் தான்.