நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
1979ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கிய படம் அழியாத கோலங்கள். அவர் தமிழில் இயக்கிய முதல் படம். பிரதாப் போத்தன், ஷோபா நடித்திருந்தார்கள். இப்போது மீண்டும் அழியாத கோலங்கள் என்ற தலைப்பில் ஒரு படம் வர இருக்கிறது. ஆனால் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்களின் ரீமேக்கோ, இரண்டாம் பாகமோ அல்ல. இது தனி கதை.
பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்குகிறார். பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக இருந்ததால் அவர் நினைவை போற்றும் வகையில் தான் இயக்கும் படத்திற்கு அழியாத கோலங்கள் என்று பெயர் வைத்திருக்கிறார். பாலுமகேந்திராவின் ஆஸ்தான நாயகி அர்ச்சனா, பிடித்த நாயகி ரேவதியுடன் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். நடுத்தர வயதினரின் மென்மையான காதல் உணர்வை சித்தரிக்கும் படம் என்கிறார்கள். அரவிந்த் சித்தார்த்தா இசை அமைத்துள்ளார், ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.