டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெங்களூரைச் சேர்ந்த அகிலா கிஷோர் கன்னடப் படங்களில் நடித்து வந்தார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் பார்த்திபன். அந்தப் படம் வெற்றி பெறவே அகிலா பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து அவர் சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். அதுதான் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
காமெடியன்களுக்கு ஹீரோயினாக நடித்தால் அதன் பிறகு ஹீரோக்களுடன் நடிப்பது சிரமம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. என்றாலும் அவர் புதுமுகம் சுனில் குமாருடன் நடித்துள்ள மூன்றாம் உலகப்போர் வருகிற 22ந் தேதி வெளிவர இருக்கிறது. இதில் ராணுவ வீரனின் காதலியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் அவருக்கு நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்ற நம்புகிறார். இனி தமிழில் தன் பணிகளை கவனித்துக் கொள்ளவும் கதை தேர்வு செய்யவும் தனியாக மேனேஜரை நியிமித்துள்ளார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு பிறகு கன்னடத்தில் 3 படங்களில் நடித்து முடித்து விட்டார் அகிலா. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அகிலா நடிக்க இருக்கிறார்.