மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்சார் கழகத்தின் செயல்பாடு கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சென்சார் கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியது. இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பதவிக்காக பலரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குழுவில் ஒருவராக நடிகர் கமலஹாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சினிமாவின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் இந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்பதாலும், மூத்த கலைஞர் என்ற முறையிலும் கமலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 6 பேர் கொண்ட சென்சார் குழுவில் கமலஹாசன், டைரக்டர்கள் ஷாஜி கருண், கவுதம் கோஷ், ராகேஷ் ஓம்பிரகாஷ் மேக்ரா, அத்மன் பியூஸ் பாண்டே, சினிமா பத்திரிக்கையாளர் பாவனா சோமைய்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.