'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை குஷ்பு, நடிகர் தனுஷ் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஜன., 11 இரவு, சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சேவை வரி செலுத்துவது தொடர்பான சரிபார்ப்பு பணியையே, வருமான வரித்துறையினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஷ்பு, தனுஷ் வீடுகளில், நேற்று வருமான வரி சோதனை நடந்ததாக, சினிமா வட்டாரங்களிலும், 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட, சமூக வலைதளங்களிலும் செய்தி பரவியது. அதனால், குஷ்பு, தனுஷ் வீடுகள் முன் செய்தியாளர்கள் குவிந்தனர். ஆனால், வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில், தெளிவான பதில் சொல்லப்படவில்லை.
சோதனை குறித்து குஷ்புவிடம் கேட்டபோது, ''நான் வீட்டில் தான் இருக்கிறேன்; அதுபோல எதுவும் நடக்கவில்லை,'' என்றார்.