'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பொன்மாலைப்பொழுது, ரம்மி, மத்தாப்பு ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. இந்த படங்களில் பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்த காயத்ரியை சில படங்களில் கிளாமரான கேரக்டர்களில் நடிக்க சில டைரக்டர்கள் அழைத்தபோது, அதற்கு மறுத்து விட்டார். நல்ல வேடங்களாக குறைவான படங்களாக நடித்தாலும் போதும் அதுவே எனக்கு திருப்திதான என்று சொல்லிக்கொண்டு, விஜயசேதுபதி நடித்த மெல்லிசை படத்தில் மட்டுமே நடித்து வந்தார். அந்த படமும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்நிலையில், இப்போது எந்த புதிய படமும் இல்லாமல் இருக்கிறார் காயத்ரி. இதுபற்றி அவரைக்கேட்டால், எனது நடிப்பு திறமையைப்பற்றி எல்லோருக்குமே தெரியும். அதனால் எனக்கான கதாபாத்திரங்கள் இருந்தால் கண்டிப்பாக டைரக்டர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார். மேலும், மெல்லிசை படம் எனக்கு மிக முக்கியமானது. இந்த படத்தில் இதுவரையில்லாத மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்துள்ளேன். அதனால் அப்படம் திரைக்கு வரும்போது எனக்கு மாறுபட்ட வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறும் காயத்ரி, மெல்லிசைக்கு பிறகுதான் அடுத்த படத்தில் கமிட்டாகவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்.