விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
மதயானைக்கூட்டம், கிருமி ஆகிய படங்களில் நடித்தவர் கதிர். இந்த இரண்டு படங்களிலுமே அவரது நடிப்பு பேசும்படியாக இருந்தது. அதோடு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டுள்ளார் கதிர். இந்த நிலையில், தற்போது பரத்துடன் இணைந்து என்னோடு விளையாடு என்ற படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார் கதிர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து கதிர் கூறுகையில், 'என்னோடு விளையாடு படம் பணத்தை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. குதிரை ரேஸ்தான் படத்தின் பிரதானமாகியிருக்கிறது. இதில் பரத்தும், நானும் இரண்டு ஹீரோக்களாக நடித்துள்ளோம். எங்களுக்கிடையே எதிரும் புதிருமான வேடம் இல்லை. நல்ல நண்பர்கள் போன்ற வேடம்தான். அந்த வகையில், என்னை விட சீனியர் நடிகரான பரத்துடன் நடித்தது ரொம்ப நல்ல அனுபவமாக அமைந்தது. நான் வளர்ந்து வரும் நடிகன் என்றபோதும் என்னுடன் சகஜமாக பழகி நடித்தார். படத்தில்தான் நண்பராக நடித்தார் என்றால், நிஜத்தில் இன்னும் நல்ல நண்பராகி விட்டார்.
அதோடு, நான் தற்போது நடித்து வரும் சிகை படத்தின் போஸ்டரைப்பார்த்து விட்டு, அந்த படத்தைப்பற்றி என்னிடம் கேட்டவர், அதில் நான் வித்தியாசமான முயற்சியை எடுப்பதை அறிந்து என்னை பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த அளவுக்கு எந்தவித ஈகோவும் இல்லாத நல்ல நடிகர் பரத். அவருடன் இணைந்து நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். மேலும், என்னோடு விளையாடு படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தற்போது பின்னணி இசைப்பணிகள் நடந்து வருகிறது. படத்தை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்கிறார் கதிர்.