'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ்-பிரபுசாலமன் இணைந்துள்ள ரயில் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. மாரி படத்தில் நடித்து முடித்த பிறகு தங்கமகனில் நடித்துக்கொண்டே இந்த படத்திற்கும் கால்சீட் கொடுத்து நடித்து வந்தார் தனுஷ். முழுக்க முழுக்க ரயிலுக்குள் நடக்கும் கதை என்பதால் ரயில் செட்டிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இறுதிகட்டமாகத்தான் வடஇந்தியா சென்று ஒரிசாவில் அவுட்டோர் காட்சிகளை படமாக்கினார் பிரபுசாலமன்.
மேலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளும் நடந்து வந்த நிலையில், தற்போது சில பேட்ஜ்ஒர்க் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதன்காரணமாக, இன்று சென்னையிலுள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்டுள்ள ரயில் செட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு இந்த படப்பிடிப்பு தொடரும் என்று தெரிகிறது. இதில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் கலந்து கொண்டு நடிக்கிறார்களாம்.