600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பச்சை மலையாளியான துல்கர் சல்மானை பற்றி இப்படி சொல்கிறீர்களே, இது அடுக்குமா என துல்கர் ரசிகர்கள் கோபத்தில் கல் தூக்க வேண்டாம். விஷயம் நம்பத்தகுந்த இடத்தில் இருந்துதான் சொல்லப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த விஷயத்தை ஒரு சேனல் பேட்டியின்போது பகிரங்கப்படுத்தியவர் மலையாள நடிகை அனுமோல். யெஸ்.. தமிழில் 'ஒரு நாள் இரவில்' படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தாரே, அதே அனுமோல் தான். அவருக்கு எப்படித்தெரியும் என்றால் மலயாள இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் 'ஞான்' படத்தில் துல்கரின் ஜோடியாக நடித்தபோது நேரிலேயே கண்ணால் கண்டதைத்தான் கூறியுள்ளாராம்.
அப்படியானால் துல்கர் தனது படங்களில் அட்சர சுத்தமாக மலையாளம் பேசுகிறாரே, அது எப்படி என்றால், வழக்கமாக நமது மும்பை நடிகைகள் பாணியில் தனது டயலாக்குகளை மங்கிலீஷில் எழுதி வைத்துக் கொள்வாராம் துல்கர். மலையாளம் படிக்க தெரியாது என்றாலும் கூட டயலாக் டெலிவரியில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அவ்வளவு அழகாக உச்சரிப்பார் துல்கர் என சர்டிபிகேட்டும் கொடுக்கிறார் அனுமோல்.. ஒருவேளை துல்கர் சென்னையிலேயே பல வருடங்கள் தனது படிப்புக்காக தங்கியிருந்தது தான், அவரை மலையாளத்தை வாசிக்கக்கூட விடாமல் செய்துவிட்டதோ என்னவோ..?