பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகளவில் குட்டிஸ்களுக்கு மட்டுமின்றி எல்லாத் தரப்பினருக்கும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் குங்ஃபூ பாண்டா. குங்ஃபூ பாண்டா படங்களில் வரும் டைகராக நடித்திருப்பவர் ஹாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி என்பது நாம் அறிந்ததே. இந்த மாதத்தின் இறுதியில் வெளிவர காத்துக் கொண்டிருக்கும் குங்ஃபூ பாண்டாவின் 3ம் பாகத்தில் ஏஞ்சலினா ஜோலியின் பங்களிப்பு மட்டுமின்றி அவரது குழந்தைகளின் பங்களிப்பும் சேர்ந்துள்ளது.
குட்டிப் பாண்டாக்களுக்கு குரல் கொடுக்கின்றனர் ஏஞ்சலினா ஜோலியின் செல்லப்பிள்ளைகளான பேக்ஸ், சாரா, ஷில்லோ மற்றும் நாக்ஸ். 7வயது ஆகும் நாக்ஸிற்கு சினிமாவில் தன் பங்களிப்பைத் தருவது இதுவே முதல்முறையாகும். பேக்ஸ் மற்றும் சாரா ஆகிய இருவரும் ஏஞ்சலினா நடித்த முந்தைய படமான மேல்ஃபிஸன்ட் படத்தில் தங்களது சினிமா பங்களிப்பை அளித்துள்ளனர். மற்றொரு குழந்தையான ஷில்லோ தனது தந்தை பிராட் பிட் நடிப்பில் வெளிவந்த பெஞ்சமின் பட்டன் மற்றும் வோர்ல் வார் படங்களில் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
குங்ஃபூ பாண்டாக்களின் தீவிர ரசிகர்களான இவர்கள் அந்த படத்தில் வரும் குட்டிப் பாண்டாக்களுக்கு குரல் கொடுத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம்.
நாயகனா போ கரடியாக கூஸ்பம்ஸ் ஹீரோ ஜேக் பிளாக், டைக்ரஸ்ஸாக ஏஞ்சலினா மற்றும் மங்கியாக மார்ஷியல் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானும் நடித்துள்ள இத்திரைப்படம் இம்மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.