தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் மூலம் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அரோல் கொரேலி. அவர் அடுத்து இசையமைத்து வெளிவந்த படம் 'பசங்க 2'. சூர்யா தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை இயக்கிய பாண்டிராஜுக்கு சில நாட்களுக்கு முன் கார் ஒன்றைப் பரிசளித்தார். தற்போது படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலிக்கு தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
அது பற்றி அரோல் கொரேலி கூறியதாவது, “சில நாட்களுக்கு முன் சூர்யா சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரைப் பார்க்கச் சென்ற போது என்னை மிகவும் பாராட்டி, தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார். 'பசங்க 2' படத்திற்கு அருமையாக இசையமைத்துள்ளீர்கள். தொடர்ந்து நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று சொன்னார். இந்தப் புத்தாண்டு சிறந்த பரிசுடன் ஆரம்பமாகியுள்ளது. என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மிஷ்கின் அவர்களும் 'பசங்க 2' படத்தில் என் இசையைப் பற்றிப் பாராட்டினார்.
தற்போது 'சவரக் கத்தி' படத்திற்கு இசையமைத்து வருகிறேன். தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடனும், புது இயக்குனர்களுடனும் இந்தப் புத்தாண்டில் பயணிக்க ஆசைப்படுகிறேன்,” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் அரோல் கொரேலி.